அத்திவரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பிக்கள் செல்லும் வழியில் காவல் துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு எவ்வித பாஸ்-ம் இல்லாமல் அழைத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா திடீரென வி.வி.ஐ.பி நுழைவு வாயிலை ஆய்வு செய்தார்.
அப்போது பாஸ் இல்லாமல் காவல் ஆய்வாளர் ஒருவர் சிலரை உள்ளே அழைத்துச் சென்ற போது கையும் களவுமாக பிடித்து கடுமையாக எச்சரித்தார்.
மேலும் அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய ஐஜிக்கு உடனடியாக உத்தரவிட்டார்.






