50 விழுக்காட்டுக்கு மேல் ஆசிரியர்கள் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு சென்றால் தேர்தலுக்கு முந்தைய நாளான நாளையும் பள்ளிக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வி ஆணையம் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் போவதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒரு பள்ளியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு பணிக்கு சென்றால் தேர்தலுக்கு முந்தைய நாளான நாளை விடுமுறை அளிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.






