அவினாசி அருகே வஞ்சிபாளையத்தில், பெடரல் வங்கியின் ஏடிஎம் மைய திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையத்தில் பெடரல் வங்கி கிளை அண்மையில் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வங்கி கிளை உள்ள நிலையில், ஏடிஎம் மையத்தை திறக்க வேண்டுமென்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், வஞ்சிபாளையத்தில் பெடரல் வங்கி ஏடிஎம் மையம் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெகுசிறப்பாக நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, வங்கியின் சென்னை மண்டல மூத்த துணைத் தலைவர் இக்பால் மனோஜ், தலைமை வகித்தார்.

ஏடிஎம் மையத்தை, வங்கி துணைத் தலைவர் சித்ரா பானு திறந்து வைத்தார். இவ்விழாவில், கோவை மண்டலத்தின் தலைமையின் உதவி துணைத் தலைவர் பெட்டி ஆண்டனி, வஞ்சிபாளையம் பெடரல் வங்கி கிளையின் முதுநிலை மேலாளர் பிரசாந்த், வங்கி கிளை ஊழியர்கள் , வாடிக்கையாளர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பெடரல் வங்கியானது, கேரள மாநிலம் கொச்சியை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன், சிறப்பாக இயங்கி வருகிறது. இந்தியாவின் 4வது மிகப்பெரிய வங்கியான இது, வாடிக்கையாளர் நலனே குறிக்கோள் என்ற அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி, தொழில் தொடங்க நிதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






