ஊரடங்கு தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டிப்பு..!

ரடங்கு உத்தரவுகள் மற்றும் தளர்வுகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் குறைந்ததால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும் உலக அளவில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரொனாவை கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் ,நவம்பர் 25 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 31ஆம் தேதி வரை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.