பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகல்களை பெற்றுக்கொண்டார்.
கடந்தாண்டு பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
பின் இருவரும் ஜாமீனில் விடுதலையாகி அவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிபதி முன்பு ஆஜரான அவர் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்பு வழக்கு விசாரணையை 21 ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






