தமிழகத்தில் கொரொனா பரிசோதனை செய்வதற்கான செயல்முறைகள் மாற்றப்பட உள்ளதாக மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பலரும் அலட்சியம் காட்டுவதாக தெரிவித்தார்.
ஒரு கோடியே 13 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக கூறினார். தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு குறைய வாய்ப்பிருப்பதாகவும் இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.






