தி.மு.க தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் இணைந்து ஆலோசனை செய்தோம். நாளைக்குள் எந்த தொகுதி என்பது முடிவாகும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செங்கோடு, அரவக்குறிச்சி, பொள்ளாச்சி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ளோம். நாளைக்குள் எந்த தொகுதி என்பது முடிவாகும் என்றார்.






