தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார். தமிழகத்தின் 32 வருவாய் மாவட்டங்கள் இருந்தன.
2019 ஆம் ஆண்டில் புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி என 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன இதனால் மாவட்டங்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி புதிய மாவட்டத்தை உருவாக்க ஏப்ரலில் அரசாணை வெளியிடப்பட்டது.
ஜூலை மாதத்தில் சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி லலிதா காவல்துறை எஸ்பியாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார்.