வெடிகுண்டு நிரப்பப்பட்ட ட்ரோன் ஏமன் தலைநகர் சனாவிமான நிலையத்திலிருந்து ஏற்பட்டதாக சவுதி அரேபியா பாதுகாப்பு படை குற்றம்சாட்டியுள்ளது. ஏமன் நாட்டில் அரசு படைக்கும் சவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவளித்துள்ளன. சவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் தலைநகர் அபுதாபியில் உள்ள விமான நிலைய எண்ணெய் நிறுவனத்தில் குறிவைத்து சவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா சவூதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.






