சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத்திடம் பா.ஜ.க நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “நெருக்கடி கொடுப்பது அவர்களுடைய (பா.ஜ.க) பழக்கம் .
நெருக்கடியை எதிர்கொள்வது எங்களுடைய வழக்கம்; விஜய் திரைப்படத்தின் தனிக்கையை நிறுத்திவைத்திருப்பது அவர்களுடைய வக்கிரமான அரசியல். பராசக்திக்கு அனுமதி கொடுத்தவர்கள் ஜனநாயகனுக்கு கொடுக்கவில்லை. அதை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
ஆகவே, நெருக்கடிகள் வரலாம். அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் எங்கள் தலைவர் விஜய்க்கு இருக்கிறது” என்று கூறினார்.






