சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ள பூட்டான்..!

எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையிலான சீனாவின் மிரட்டலுக்கு பூட்டான் பதிலடி கொடுத்துள்ளது. பூட்டானில் அமைந்திருக்கும் சாக்தேன் என்ற வனவிலங்கு சரணாலய பகுதி தங்களுக்கு சொந்தமானது என சீனா அண்மையில் கூறியிருந்தது.

 

இருதரப்பு பேச்சுகள் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிற நாடுகள் வனவிலங்கு சரணாலயத்திற்கு நிதி அளிக்க கூடாது என்றும் சீனா கூறியிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் பூட்டான் டெல்லியில் உள்ள தனது தூதரகத்தின் மூலம் சீன தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் சீனாவின் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.