திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, வைபவ் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பத்துடன் வருகை தந்த ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் ஏழுமலையானை வரிசையில் நின்று தரிசனம் செய்தார்.
அதை போன்று நடிகர்கள் பாபி சிம்ஹா, வைபவ் அங்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருப்பதி வந்திருந்தனர். அவர்களை பார்த்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.






