வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சமீராரெட்டி. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தற்போது திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். சமீரா ரெட்டி என்றாலே ஞாயாபகத்திற்கு வருவது நல்ல உயரம் தான். வாரணம் ஆயிரம் படத்தில் ஒரு கதாநாயகிக்கு உரிய எளிமையான குணத்தையும், அழகான நளினத்தையும் கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.
இந்த படத்திற்கு பின் அவரை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.விஷாலுடன் சேர்ந்து வெடி, அசல் போன்ற படங்களில் கொஞ்சம் வாயாடியாக நடித்திருந்தாலும் வாரணம் ஆயிரம் படத்தில் தான் அவருக்கு ரசிகர்கள் உண்டு. சமீபத்தில்தான் சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மீண்டும் உடற்பயிற்சி செய்து தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் துளிகூட மேக்கப் இல்லாத ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.







