தனது வளைகாப்பு புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பெரிதளவில் பேசப்பட்டவர். ரம்யா கிருஷ்ணனுக்கு என தனி ஆட்டிட்யூட் எப்பொழுதும் உண்டு.

 

அது மட்டுமில்லாமல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து அவர் குயின் வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர்.

இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் இருக்கும் தனது இரண்டு பெரியயம்மா தற்போது உயிருடன் இல்லை என உருக்கமாகவும் பதிவிட்டுள்ளார்.