பண மோசடி செய்வதாக சினிமா தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் டி நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். நடிகர் விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகர் விஷால் படங்களில் நடித்து வருவதுடன் படங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக சவுத்ரியிடம் கடன் பெற்றதாகவும் அதற்கு அடமானமாக சில பொருட்களை கொடுத்து தான் பணத்தை பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பிக் கொடுத்த பிறகும் தான் அடமானமாக கொடுத்த பத்திரத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக புகார் அளித்துள்ளார்.