10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ளக்கூடாது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி இருக்கிறார்.
அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பான அறிவிப்பை வழங்கி இருக்கிறார்.






