9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனரின் பரிசோதனையில் தஞ்சை மற்றும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது என்றும் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளை சுற்றி மட்டுமல்லாமல் மாவட்டத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதை கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி மார்ச் 22ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு இணையவழி மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழ்நாடு மாநில ஆசிரியர்கள் தவிர மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது தேர்வு நடத்தவும் அவர்களுக்கு விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது என ராஜப்பன் பனிரெண்டாம் வகுப்பை தொடர்ந்து நடத்த அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.







