10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்கள், புகார்கள் தொடர்பாக உதவிக்காகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதியும் தொடங்குகிறது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேரும் எழுதுகின்றனர்.மாணவர்கள், பொதுமக்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்துவரத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் அலைபேசியை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






