10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே..!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்கள், புகார்கள் தொடர்பாக உதவிக்காகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதியும் தொடங்குகிறது.

 

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேரும் எழுதுகின்றனர்.மாணவர்கள், பொதுமக்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்துவரத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் அலைபேசியை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் முக்கிய கவனத்திற்கு..!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்பான மழை காரணமாக தேர்வர்களின் நலன் கருதி வருகிற 20-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

 

 


மார்ச் 10, 11ல் வேட்பாளர் நேர்காணல்..!

க்களவை தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட 2,934 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதற்கிடையே விருப்ப மனு அளிப்பவரிடம் நேர்காணல் நடத்தப்படும் தேதிகளை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளனர்.

 

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பவரிடம் நாடாளுமன்ற தொகுதி வாரியாக நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விருப்ப மனு அளிப்பவர்களிடம் எம்ஜிஆர் மாளிகையில் நேர்காண நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை உள்ளிட்ட 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திங்கள் கிழமை அன்று திண்டுக்கல், கரூர், நாகை, தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நேர்காணலுக்கு வருபவர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திமுகவிலும் விருப்ப மனு அளிப்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 


10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வந்தது புதிய அப்டேட்..!

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொது தேர்வுக்கான அட்டவணை நாளை காலை வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

ஒரு சில தினங்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியாகும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

 


இந்தியாவில் ஒரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா உறுதி..!

ரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

 

தினசரி கொரோனா பாதிப்பு விகிதமானது 4.42 விழுக்காட்டில் இருந்து 5.0வாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 


11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது..!

மிழகத்தில் 11 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கியுள்ளன. 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான +2 பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்குகிறது. இதைப் போல 11ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்க உள்ளது.

 

இதற்கு முன்பாக மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் செய்முறை தேர்வுக்கும் , பொது தேர்வுக்கும் இடையிலான இடைவெளி சில நாட்களே இருப்பதால் அதை முன்கூட்டியே நடத்த வேண்டும் என மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

 

பின் அந்த கோரிக்கையை ஏற்று தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன. இந்த செய்முறை தேர்வுகள் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது.

 


11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு..!

தினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் 28ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 


10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!

2022 – 2023 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான கல்வியாண்டு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.

 

மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும்.

 


10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெறும்..!

10, 11, 12ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.