10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய வேலூர் மத்திய சிறைவாசிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். மகளிர் தனிச்சிறையில் இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய இரண்டு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் ராதா என்பவர் 500க்கு 414 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 11-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பெண் சிறைவாசிகள் இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் அமுதா என்பவர் 600க்கு 448 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆண்கள் மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 27 பேரில் 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மணிமாறன் என்பவர் 500க்கு 441 மதிப்பெண்களை பெற்றுள்ளார். 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய ஒன்பது பேரில் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.







