10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது? – வெளியான முக்கிய தகவல்

10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஒப்படைத்துள்ளார்.

 

இந்தநிலையில் பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


10, 11-ம் வகுப்பு துணைத் தேர்வுகள் அட்டவணை வெளியீடு..!

மிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (DGE), 2025 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு (SSLC) மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

 

அட்டவணையின்படி, தேர்வுகள் ஜூலை 4, 2025 முதல் தொடங்கும், மேலும் அனைத்து பாடங்களுக்கும் காலை அமர்வில் தேர்வு நடைபெறும்.10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் திட்டமிடப்பட்ட தேதிகளில் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை நடத்தப்படும்.

 

ஒவ்வொரு தேர்வின் தொடக்கத்திலும் வினாத்தாளைப் படித்து தங்கள் விவரங்களைச் சரிபார்க்க மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படும். தேர்வு வழக்கமான தெளிவு மற்றும் போதுமான தயாரிப்பு நேரத்தை உறுதி செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.


10, +1 மாணவர்களுக்கு இன்று முதல் மார்க் சீட் விநியோகம்!

10 மற்றும் 11-ம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (மே 19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளில் படித்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மூலமாகவும், தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற அரசின் இணையதளம் மூலம் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

விடைத்தாள் நகல் கோரி நாளை(மே 20) முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

TN Board TNDGE SSLC, HSE +1 Result 2025 Live Updates: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE) 2025ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகளை இன்று, மே 16, 2025 அன்று காலை 9:00 மணிக்கு வெளியிட உள்ளது. செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ இணையதளங்களில் காலை 9:10 மணி முதல் தேர்வு முடிவுகளை பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

 

தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது: மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.’TN SSLC Result’ மொபைல் செயலி மூலமாகவும் உங்கள் முடிவைப் பார்க்கலாம். செயலியைப் பதிவிறக்கி, தேர்வு முடிவு இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளிடவும். அதுமட்டுமின்றி தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவர்களின் அளித்துள்ள மொபைல் எண்களுக்கு அனுப்பப்படும்.

 

 

தேர்ச்சி மதிப்பெண்கள்: TN SSLC தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 100க்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதில் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும்.


10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே..!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்கள், புகார்கள் தொடர்பாக உதவிக்காகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதியும் தொடங்குகிறது.

 

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேரும் எழுதுகின்றனர்.மாணவர்கள், பொதுமக்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்துவரத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் அலைபேசியை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் முக்கிய கவனத்திற்கு..!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்பான மழை காரணமாக தேர்வர்களின் நலன் கருதி வருகிற 20-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

 

 


10, 12-ஆம் வகுப்பு தேர்வு.. அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் உத்தரவு..!

10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ளக்கூடாது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி இருக்கிறார்.

 

அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பான அறிவிப்பை வழங்கி இருக்கிறார்.

 


10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வந்தது புதிய அப்டேட்..!

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொது தேர்வுக்கான அட்டவணை நாளை காலை வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

ஒரு சில தினங்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியாகும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

 


10, 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

பூவிருந்த வள்ளியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து வீடு தேடி சென்று பரிசு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.