பூனைக்கு சீமந்தம் செய்யும் வீடியோ வைரல்..!

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் பூனைக்கு சீமந்தம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

திருவேற்காட்டை சேர்ந்த ஜோதி குமார் என்பவர் வீட்டில் இருக்கும் பூனை கருவுற்று இருப்பதை உணர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தம் செய்வது போன்று ஏழு வகையான உணவு சீர்வரிசை தட்டுகள் வைத்ததுடன் உறவினர்களை அழைத்து வளையல் அணிவித்தும் சீமந்தம் செய்துள்ளார்.