தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழக உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக இன்று அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

நாளை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாவும் கூறப்பட்டுள்ளது.

 

இதனிடையே வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாகவும், அது 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெயத நிலையில் மரக்குளம் கிராமத்தில் மின்னல் தாக்கி 2பெண்கள் படுகாயமடைந்தனர். சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாணியங்குடி, காஞ்சிரங்கால் ,பையூர், முத்துப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

 

இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.மேலும், சென்னையில் அடையாறு, தரமணி, வேளச்சேரி, கிண்டி, போரூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.. இதேபோல் புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.


தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை…!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.

 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழை பெய்யும் இடங்கள்: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதே போன்று, வெள்ளிக்கிழமையன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

மிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை நகரில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. குமரி கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

மிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றால் வரும் 13ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும்,  அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.