திருச்சியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மதுபானம் விற்றது தொடர்பான செய்தியை வெளியிட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களான தீனா, வினோத் ஆகிய இருவரும் மண்ணச்சநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்பொழுது அவர்களை நான்கு நபர்கள் பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடத்தி அவர்களின் செல்போன்களை உடைத்துள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







