சிறுமிகளிடம் அத்துமீறிய 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது..!

ராணிப்பேட்டையில் இரு வேறு சம்பவங்களில் சிறுமிகளிடம் அத்துமீறிய 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்றதாக தெரிகிறது.

 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். காலனியை சேர்ந்த 17 வயது சிறுமியை தமிழரசன் என்ற இளைஞர் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் தமிழரசன் கைது செய்யப்பட்டார்.