தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி சில பிரபலங்கள் நிறைய சிறப்பான விஷயங்கள் செய்து வருகின்றனர். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர் தான் ராகவா லாரன்ஸ்.
நடிகர், நடன கலைஞர் என பன்முகம் கொண்டவர் தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறார்.இந்நிலையில், ராகவா லாரன்ஸ் அவரது சொந்த வீட்டை என்ன செய்ய போகிறார் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். தற்போது, அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” நான் கட்டிய என் சொந்த வீட்டை சில மாற்றங்கள் செய்து பள்ளிக்கூடமாக மாற்றி இலவச கல்வி கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதே வீட்டில் வளர்ந்த பெண் இந்த பள்ளிக்கூடத்தின் முதல் டீச்சராகிறார்” என்று தெரிவித்துள்ளார்.