கர்நாடகாவில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் ஹிஜாபை அகற்றக் கூடிய நிலையில் மாணவிகள் மீண்டும் வீட்டிற்கே திரும்பி சென்றனர். கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஐந்து நாட்கள் விடுமுறை நிறைவடைந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வர துவங்கியுள்ளனர். இந்த நிலையில் ஷிமோகாவில் உள்ள ஒரு பள்ளியில் இருந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். ஹிஜாபை அகற்ற மறுத்த 13 மாணவிகளும் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அதே பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.






