ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து யானை கூட்டத்தில் இருந்த யானை ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தலைமலை வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் உள்ளன.
அண்மை காலமாக அங்கு யானைகள் சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்துள்ளது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இன்று யானை கூட்டம் ஒன்று சாலையை கடந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கார் ஹார்ன் எழுப்பியதால் கூட்டத்தில் இருந்த யானை வந்து காரைத் துரத்தியது.
அச்சமடைந்த ஓட்டுநர் காரை வேகமாக பின்னோக்கி இயக்கியுள்ளார். காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






