கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் உள்ள சாஸ்தா கோவில் அரசமரத்தை மர்ம நபர்கள் வெட்டியதால் அதில் சிகப்பு நிற திரவம் வழிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாலய கால்வாய் அருகே விநாயகர் மற்றும் சாஸ்தா இணைந்த கோயில் ஒன்று உள்ளது.
திருக்கோயில் வளாகத்தில் அரசமரம் உள்ளது. இந்த மரத்தை மர்மநபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். மீதி இருந்த அடிமரத்திலிருந்து சிவப்பு நிற திரவம் கசிந்து தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வெட்டிய கோயில் மரத்தில் இருந்து ரத்தம் வடிவதாகவும். இது தெய்வ குற்றம் எனவும் தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த தோவாளை சுற்றுவட்டார பகுதி மக்கள் வெட்டப்பட்ட கோவில் மரத்தை அதிசயமாக பார்த்து சென்றனர்.






