உக்ரைனை சேர்ந்த பர்சன், எர்ணா என்ற ஜோடி வருகிற மே மாதம் உக்ரைன் தலை நகர் கிவ்வில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட்டில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். பிப்ரவரி 24ஆம் தேதி முதல் ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கியது.
நிலைமை கைமீறிப் போய் விடுமோ என்று நினைத்த இளம் ஜோடி உடனடியாக தங்களது கல்யாணத்தை நடத்த திட்டமிட்டு தற்போது போருக்கு நடுவே வான்வழி தாக்குதலுக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தம்பதிகள் இருவரும் முக்கிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஆயுதமேந்தி ரஷ்யாவுக்கு எதிராக போர் செய்யவே இந்த உடனடி திருமணம் என்று தெரிவித்துள்ளனர்.






