கொலம்பியாவில் மின்கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த கரடியை மின்சார ஊழியர் ஒருவர் பத்திரமாக மீட்டார். பெர்னாட்ஷா நகரில் மின்கம்பியில் தொங்கிய கரடி குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த ஊழியர் மின்கம்பத்தில் ஏறி கரடியை பிடிக்க முயற்சி செய்தார்.
அவரை பார்த்து அந்த கரடி முதலில் சிறிது அஞ்சிய நிலையில் பின்னர் குச்சி உதவியுடன் கரடியை அவர் பத்திரமாக மீட்டார். 20 நிமிடம் போராடி மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.






