விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகியதால் முன்னணி நடிகர் சிலம்பரசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியேறினார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக இருப்பதாகவும் அதனால்தான் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரடியாக பிக்பாஸிடம் தெரிவித்துவிட்டு வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான காரணங்கள், வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் வனிதா விஜயகுமார் இதனை மறுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறிய பொழுது எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மன ரீதியாக ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இந்த முடிவை எடுத்தேன் என்பது இன்றியமையாதது எனக் கூறியுள்ளார்.






