டீ குடிக்கும் போது டம்ளரை விழுங்கி விட்டேன் எனக்கூறிய முதியவர்..!

பீகார் மாநிலத்தில் வயிற்று வலி என மருத்துவமனை சென்ற முதியவரின் வயிற்றிலிருந்து டம்ளரை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.

 

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் பகுதியில் முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் என மருத்துவமனை சென்று இருக்கிறார். அவர் வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அவரின் வயிற்றில் ஏதோ ஒரு பொருள் இருப்பதை பார்த்து அதை எண்டோஸ்கோப்பி மூலம் எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

 

முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. இதனையடுத்து முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் முதியவரின் வயிற்றில் ஒரு டம்ளர் இருப்பதைக் கண்டு மற்றவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதன் பிறகு மற்றவர்கள் அறுவை சிகிச்சையை முடித்து விட்டு அவரது குடும்பத்தாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர்.

 

அதில் அவரது குடும்பத்தினருக்கும் இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. இதன் பின்னர் மருத்துவர்கள் முதியவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு முதியவர் நான் ஒரு முறை டீ குடிக்கும் பொழுது டம்ளரையும் சேர்த்து விழுங்கி விட்டதாக கூறியுள்ளார்.

 

ஆனால் மருத்துவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒரு மனிதனின் உணவுக் குழாயில் இவ்வளவு தரமான பொருள் செல்ல வாய்ப்பே இல்லை எனக் கூறும் மருத்துவர்கள் முதியவர் வயிற்றுக்குள் டம்ளர் செல்ல ஒரே வாய்ப்பு தான் இருக்கிறது.

 

அதற்கு முதியவர் ஆசனவாயில் வழியே செலுத்தி இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.