சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை..!

ரோட்டில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டது. ரயில் நிலையத்தில் உள்ள சாக்கடையில் பெண் குழந்தை கிடந்துள்ளது. இன்று இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வந்து குழந்தையை சாக்கடையில் இருந்து மீட்டு தொப்புள்கொடியை அகற்றிவிட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.