கேரள அரசுக்கு தமிழக அரசு எதிர்ப்பு..!

கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் அரசு விட்டுக் கொடுக்காது எனவும் கூறியுள்ளார்.

 

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என கேரள ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.