உக்ரைனில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்களில் 40 பேர் போலந்து எல்லைப் பகுதிக்கு வந்தடைந்தனர். மருத்துவ பல்கலைக் கழக பேருந்து மூலம் மாணவர்கள் கொண்டுவரப்பட்டு போலந்து எல்லைக்கு 8 கிலோ மீட்டருக்கு அப்பால் இறக்கி விடப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் போலந்து எல்லைக்கு நடந்து வந்தனர்.






