இனி பெட்ரோல் விலை உயர வாய்ப்பு..!

த்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101 ரூபாய் 40 காசுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுக்கு விற்பனையாகிறது.

 

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 109 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமில்லை. தேர்தல் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் விலையை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல் டீசல் விலை உயருகிறது.