ஆன்லைனில் தேர்வை நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

புதுச்சேரியில் அரசு கல்லூரிகளில் நேரடியாக தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் நாட்களில் நேரடி தேர்வு நடத்தப்படும் என சமீபத்தில் பல்கலைக்கழகம் அறிவித்தது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்தவேண்டும் அவர்கள் வலியுறுத்தினர்.