அக்காவுக்காக மாமாவை கட்டையால் அடிக்க ஓடும் 3 வயது சிறுவன்..!

னது அக்காவை தாக்குவதாக எண்ணி மாமாவை சிறுவன் ஒருவன் கட்டையை தூக்கிக் கொண்டு அடிக்க துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் சத்யா இணையருக்கு மூன்று வயது மகளும், அர்ஜுன் என்ற இரண்டரை வயது மகனும் உள்ளனர்.

 

இந்நிலையில் சிறுமியுடன் அவரது தாய்மாமன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள பள்ளத்தில் சிறுமி தவறி விழுந்ததை கண்டு மாமா அடிப்பதாக எண்ணி மாமாவை தாக்குவதற்காக அருகிலிருந்த கட்டையை எடுத்துக்கொண்டு சிறுவன் ஓடி வந்தார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.