ஃபேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாவில் பிரச்சாரம் செய்யக் கூடாது..!

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடிப் பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் வலைத்தளங்களில் நடைபெறும் பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.

 

இந்த தேர்தலில் சமூக வலைதளம் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணியை பெரும்பாலான வேட்பாளர்கள் மேற்கொண்டனர். அதாவது வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.

 

தங்கள் தொகுதியில் உள்ள வாக்காளர்களின் வாட்ஸ்அப் எண்களை பெற்று தங்களது வாக்குறுதிகளை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து ஆதரவு திரட்டினர். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பதிவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 

இந்த நிலையில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளவும் விளம்பரங்கள் செய்வதற்கும் அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .சமூக வலைதளம் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.