10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்பான மழை காரணமாக தேர்வர்களின் நலன் கருதி வருகிற 20-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.






