AI தொழில்நுட்பம், நல்ல முறையில் பயன்படுத்தினால் நிறைய விஷயங்களில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் நல்ல விஷயங்களுக்கு பதிலாக கெட்ட விஷயங்களுக்கு அதிகம் பயன்படுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டீப் ஃபேக் முறையில் ராஷ்மிகா மந்தனா வீடியோ வெளியாக பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.
ராஷ்மிகாவுடன் இந்த பிரச்சனை முடியவில்லை, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீலீலா, சமந்தா, தமன்னா என தொடர்ந்து நடிகைகளின் புகைப்படங்கள் மோசமாக எடிட் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த நிலையில் இளம் நடிகை ஸ்ரீலீலா, ஏஐ தொழில்நுட்பத்தை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தாமல் கெட்ட விஷயத்துக்கு சர்வ சாதாரணமாக பயன்படுத்திகின்றனர்.
ஒவ்வொரு பெண்ணும் ஒருத்தரின் பேத்தியாகவோ, மகளாகவோ, அக்கா, தங்கையாகவோ, தோழியாகவோ இருப்பார்கள், ஏன் இப்படி பண்றீங்க என பதிவு செய்துள்ளார்.






