கோயம்பேடு பணிமனையில் திருப்பதி செல்ல தயாராக இருந்த அரசு பேருந்து காணாமல்போனதாக மேலாளர் ராமசிங் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை நடத்திய விசாரணையில், திருடப்பட்ட பேருந்து ஆந்திராவின் நெல்லூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்தை திருடி சென்ற காது கேளாத, வாய் பேசமுடியாத ஞானராஜன் சவுரவு (24) கைது செய்யப்பட்டுள்ளார்.