இலங்கையில் இரண்டு நாட்களாக அரசுக்கு எதிராக வன்முறை நீடித்து வரும் நிலையில் சொத்துக்களை சேதப்படுத்துவோர்களை சுட்டு தள்ள முப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் தற்பொழுது வன்முறையாக மாறியது. கடந்த ஒரு மாத காலமாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதன் எதிரொலியாக நாடு முழுவதும் வன்முறை பரப்பும் நிலையில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். ஆட்சியாளர்கள் மீதான பொதுமக்களின் கோபம் தீரவில்லை. மஹிந்தவின் பூர்வீக மாளிகைகள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான 30க்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள் :
திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!
ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்
திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் - நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரி...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை..!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது - இளையராஜா தரப்பு






