இந்த முழு பொது ஊடகத்தில் தமிழ் நடிகர், நடிகைகள் அவர்களுடைய தனித் திறமைகளை வெளிக்காட்டி பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் வனிதா ஊரடங்கின் ஒரு திருமணத்தை நடத்தி விட்டு அதன் மூலம் எழுந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் அடுத்தடுத்து பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார்.
வனிதா ஒரு நடிகையாக அறிமுகமானாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் வனிதா யார் என்று உண்மையான ரூபத்தை மக்களுக்கு காட்டியது. இந்த நிலையில் வனிதா அதனைத் தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்தப் போட்டியில் அவர் வெற்றியாளராக பரிசு பெற்றார். இதனை தொடர்ந்து முழு முடக்கத்தின் போது அவர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் தான் இவரது பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. பீர்பாலின் முதல் மனைவி தன்னிடம் விவாகரத்து பெறாமல் அவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் கஸ்தூரி போன்றோர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதற்கு வெளிப்படையாகவும் நேரடியாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் கஸ்தூரியிடம் வாக்குவாதம் நடத்தினார் வனிதா.
ட்விட்டரிலும் வனிதா ராமகிருஷ்ணன் வனிதா சண்டை தொடங்கியது. ஊரே இவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. பொது மக்களும் அவரவர் சார்பில் அவர்களது கமெண்ட்டுகளை தெரிவித்து வந்தனர். அதோடு தனக்கு நிறைய போலி அக்கவுண்ட்க வருவதாக கூறி அக்கவுண்டில் இருந்து கமெண்ட்டுகள் வருவதாக கூறி டிவிட்டர் அக்கவுண்டை டீ ஆக்டிவேட் பதிவு செய்துள்ளார்.
மேலும் தஞ்சாவூரில் உள்ள பாதிப்பேர் இரண்டு பொண்டாட்டி உள்ளவர்கள் தான் என்று வனிதா பேசினார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.







