பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மேலும் பல நடவடிக்கைகளை அறிவிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஐடியா உச்சி மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய நிர்மலா சீதாராமன் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் வகையில் மின்சாரம், எரிபொருள், சரக்கு போக்குவரத்து போன்றவை அதிகரித்து வருவதாக கூறினார்.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க நாட்டின் மொத்த உற்பத்தியில் 10% அளவுக்கு திட்டங்களை அறிவித்து இருப்பதாகவும் அந்த அறிவிப்புகள் பலன் அளிக்கத் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்காக மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்காது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செய்திகள் :
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி..!
காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்..!
பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்த கேரளா மத்திய அரசுடன் ஒப்பந்தம்..!
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்..!
ஆந்திராவில் தீக்கிரையான ஆம்னி பேருந்து.. 40 பேரில் 25 பேர் பலியான சோகம்..!






