இந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடையா?

தடை செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனங்கள் மீது தண்டனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

 

இது தொடர்பாக தடை செய்யப்பட்ட செயலிகளின் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதன் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட செயலிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கிடைப்பது மற்றும் செயல்படுவது சட்டவிரோதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

முன்னதாக அந்நிறுவனங்களுக்கு 79 கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி இருந்த மத்திய அரசு இன்றைக்குள் பதில் அளிக்காவிட்டால் 59 செயல்களும் இந்தியாவில் நிரந்தரமாக தடை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.


Leave a Reply