பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர்..!
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே திருமணமான பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். மேல்நிம்மெலி கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் வெளியானது.
இது குறித்து அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் புகைப்பட பதிவேற்றப்பட்ட செல்போன் ஐஎம்ஏ எண்ணை கொண்டு அதே பகுதியில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் கணேசனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அதில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டது தெரியவந்தது.






