--- --:--:-- --

கைக்குழந்தையை தூக்கிப் போட்டு ரசித்த கொடூரன்..!

8

ள்ளக்காதல் விவகாரத்தால் பச்சக்குழந்தையை வெந்நீரில் வைத்து கொன்ற சம்பவம் மகாராஷ்டிராவின் புனேவில் நடந்துள்ளது.புனேவின் கேத் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் சரத் கோலேகர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

 

அந்த பெண்ணுக்கு 15 மாத குழந்தை இருப்பது குறிப்பிடதக்கது. இருவரும் அடிக்கடி தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்த சூழலில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விக்ரம் அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

இதனால் விக்ரம் ஆத்திரத்தில் இருந்துள்ளார், இருப்பினும் இருவருக்கிடையேயான கள்ளக்காதல் உறவில் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்தே வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற விக்ரம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூற அந்த பெண் மீண்டும் மறுத்துள்ளார்.

 

இருப்பினும் அன்று இருவரும் உறவு கொண்டபின், குழந்தையை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அந்த பெண் வெளியே சென்றுள்ளார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நபர், ஒரு பெரிய பக்கெட்டில் நீரை நிறைத்து அடுப்பில் ஏற்றியுள்ளார். கொதி கொதிக்கும் அந்த வெந்நீரில் 15 மாத பச்சக்குழந்தையை போட்டுள்ளார்.

 

குழந்தை அலறுவதை பார்த்து ரசித்துள்ளார். வெளியே சென்ற பெண் வீட்டிற்கு வந்தபோது இதைபார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். சமீப காலத்தில் முறைதவறிய உறவுகள் அதிகரித்து வருவதை தான் இந்த சம்பவம் காட்டுகிறது.

 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொல்வது, மாமியாரை கொல்வது, கள்ளக்காதலியை கொல்வது, வீட்டிற்கு தெரிந்தும் உறவை விட மறுக்கும் கள்ளக்காதலனை கொள்வது என கொலை சம்பவங்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன.

 

கள்ளக்காதலுக்கு இது தான் காரணம் என அறுதியிட்டு கூறமுடியாது என உளவியலாளர்கள் கூறிவருகின்றனர். பணம், பாசம், காமம், உடல் தேவை, விருப்பம், குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் முறை தவறிய உறவுகள் ஏற்படுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுவது குறிப்பிடதக்கது.

Right Menu Icon