--- --:--:-- --

மது குடித்துவிட்டு பாம்பு நடனம் ஆடிய காவலர்கள்!

5

தெலுங்கானா மாநிலத்தில் 6 போலீசார் திறந்தவெளியில் மது அருந்தியவாறே பாம்பு நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. சைபராபாத் நகருக்கு உட்பட்ட கொத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஐந்து காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் சக காவலரின் திருமண விழாவில் கலந்து கொண்ட நிலையில் அருகிலுள்ள திறந்தவெளியில் அவர்கள் மது அருந்தியவாறே பாம்பு நடனம் ஆடினர்.

 

நடனமாடும் போது அவர்கள் சீருடையிலோ அல்லது பணியிலோ இல்லை. சமூக பொறுப்புள்ள காவலர்கள் மது அருந்திவிட்டு திறந்தவெளியில் குத்தாட்டம் போட்டது விமர்சனத்திற்கு உள்ளானது.

 

கடந்தவாரம் காவல் ஆய்வாளர் ஒருவரும் இதேபோன்று மது அருந்திவிட்டு பாம்பு நடனமாடிய வீடியோ வைரல் ஆன நிலையில் இரு சம்பவங்கள் குறித்தும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon