சீனா பாகிஸ்தான் எல்லையை கண்காணிக்க நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்..!
19 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் அதில் இந்தியப் பெருங்கடல் எல்லையை கண்காணிக்கும் சிந்து நெத்ரா செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சிந்து செயற்கைக்கோள் இந்திய பெருங்கடலில் போர் மற்றும் சரக்கு கப்பல்களில் செயல்பாட்டை துல்லியமாக கண்காணித்து தகவல் தெரிவிக்க வல்லது.
மேலும் தென் சீனக் கடல் பகுதி அல்லது வளைகுடா கடல் பகுதி மற்றும் சீன பாகிஸ்தான் எல்லையையும் இதன் மூலம் கண்கஷாணிக்க முடியும் என்றும் இதனை தரையில் இருந்து தொடர்பு கொண்டே இயக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






